என்னய மன்னிச்சுடு பாப்பு..! நர்சிங் மாணவி தற்கொலை விவகாரத்தில் திருப்பம்.!!
Kanyakumari Aralvaimozhi Nursing Girl Student Suicide Issue Police Recover Letter 26 April 2021
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியை சார்ந்தவர் பிராட்வின் மீபியா (வயது 21). இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி மருத்துவமனையில் நர்சிங் மாணவியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், பிராட்வின் மீபியா வாலிபரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று தனது காதலனுக்கு வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பேசிய பெண்மணி, தூக்கிட்டு தற்கொலை செய்யப்போவதாக கூறி இருக்கிறார்.
மேலும், வீடியோ காலில் பேசியவாறே தூக்கு கயிறை மாட்டிய நிலையில், வீடியோ கால் பேசிய காதலன் செய்வதறியாது திகைத்துள்ளார். பின்னர், மீபியாவின் நண்பர்களை தொடர்பு கொண்டு அவளை காப்பாற்றக்கூறி கதறியழுதுள்ளார்.
எதுவும் பலனில்லாமல் பெண்மணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மீபியாவின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்த விசாரணையில், மீபியாவின் கடிதம் கைப்பற்றப்பட்டது. இந்த கடிதத்தில், " எனது மரணத்திற்கு யாரும் காரணம் கிடையாது. என்னை மன்னித்துவிடுங்கள். நான் காதலுக்கு தகுதியானவர் கிடையாது. மன்னித்துவிடு பாப்பு. அம்மா, அப்பா, தம்பி ஜெகதீஸ் ஆகியோரும் என்னை மன்னித்துவிடுங்கள் " என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kanyakumari Aralvaimozhi Nursing Girl Student Suicide Issue Police Recover Letter 26 April 2021