ஊர்விட்டு ஊர் வந்து கார் திருட்டு.. புள்ளிங்கோவை சிங்கம் பட பாணியில் விரட்டிப்பிடித்த காவலர்..! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லீஸ் நகர் பகுதியை சார்ந்தவர் வெங்கடேசன். இவரது நண்பர் வேல்பாண்டி. இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தில் காரை வாடகைக்கு எடுத்து இருக்கின்றனர். காரின் ஓட்டுநர் இருவரையும் அழைத்துக்கொண்டு காஞ்சிபுரம் புறவழிச்சாலை பகுதியில் செல்கையில், வெங்கடேசன் மற்றும் வேல்பாண்டி ஓட்டுனரை தாக்கி காரில் இருந்து சாலையில் தள்ளிவிட்டுள்ளனர். 

பின்னர், காரினை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காரின் ஓட்டுநர் உரிமையாளர் பிரகாஷுக்கு தகவல் தெரிவிக்கவே, பிரகாஷ் உடனடியாக சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்றகாவல் துறையினர், உடனடியாக கடத்தப்பட்ட கார் தொடர்பான விபரத்தை தமிழகம் முழுவதும் உள்ள காவல் துறையினருக்கு அனுப்பியுள்ளனர். இந்த தகவல் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி செங்கமலம் கண்ணனுக்கும் தெரியவந்துள்ளது. 

அவருக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத நிலையில், மருந்து வாங்குவதற்கு அவரது கார் ஓட்டுநரான காவலர் பிரசாந்தை பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகேயுள்ள மருந்தகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்போது, கடத்தப்பட்ட கார் பிரசாந்தின் கண்களில் தென்பட்டுள்ளது. உடனடியாக காரை நோக்கி ஓடிய நிலையில், காவல் அதிகாரியை கண்ட கொள்ளையர்கள், காவல் அதிகாரியை தள்ளிவிட்டு சாலையில் தலைதெறிக்க ஓடி தப்பி செல்ல முயற்சித்துள்ளனர். 

இந்த துரத்தல் சம்பவத்தின் போது காவலர் கீழே விழுந்து காயமடைந்த நிலையில், சம்பவ இடத்தில் இருந்த போக்குவரத்து காவலர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் காவலர் பிரசாந்த் குற்றவாளி வேல்பாண்டியை பிடித்துள்ளார். பின்னர், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் விரைந்து வந்து வேல்பாண்டியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

வேல்பாண்டி மற்றும் வெங்கடேசன் கடத்தி வந்த காரினை சோதனை செய்கையில், அதில் அரிவாள் மற்றும் கத்தி உட்பட பயங்கர ஆயுதமும் இருந்துள்ளது. வேல்பாண்டியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், தலைமறைவாக உள்ள வெங்கடேசனுக்கு வலைவீசப்பட்டுள்ளது. மேலும், காவலர் பிரசாந்த் குற்றவாளியை துரத்தும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram Stolen Car Recovered Thanjavur Pattukkottai Area one Culprit Arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->