கிணற்றுக்கு குளிக்க சென்று, வலிப்பு வந்து பலியான பரிதாபம்.. காஞ்சியில் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை சாலமங்கலம் பகுதியை சார்ந்தவர் குகன் (வயது 40). இவர் படப்பை பஜார் பகுதியில் உணவகம் நடத்தி வந்த நிலையில், அங்குள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் குகனின் அக்கா ஆதிலட்சுமியின் இல்லத்திற்கு பின்புறம் உள்ளே கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். 

அந்த சமயத்தில், குகனிற்கு திடீரென வலிப்பு ஏற்படவே, எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதனைக்கண்ட ஆதிலட்சுமியின் மகன் சதீஷ் (வயது 16), குகனை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்துள்ளார். 

அவருக்கும் நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறல் ஏற்படவே, காவல் துறையினர் மணிமங்கலம் தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், குகனின் உடலை மீட்ட நிலையில், உயிருக்கு போராடிய சதீஷை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram man died during bath in Well


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->