திருவள்ளூர்: தறிகெட்டு வந்த மணல் லாரி.. தந்தை, இரண்டு பச்சிளம் குழந்தைகள் மரணம்.!
Kanchipuram Family Died Accident Near Thiruvallur Police Investigation 16 March 2021
மணல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, இரண்டு குழந்தைகள் என மூவர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் மாரிமங்கலம் கிராமத்தை சார்ந்தவர் ஜெகதீஷ் (வயது 35). இவர் திருவள்ளூரில் இருந்து மாரிமங்கலத்திற்கு தனது மனைவி சங்கீதாவுடன் (வயது 35). இவர்களுடன் தம்பதிகளின் குழந்தைகளான தனுஜா ஸ்ரீ (வயது 3) மற்றும் தருண் (வயது 2) ஆகியோரும் வாகனத்தில் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் வாகனம் திருவள்ளூர் - கடம்பத்தூர் சாலையில் உள்ள திருப்பாசூர் பகுதியில் செல்கையில், அவ்வழியாக எதிரே வந்த மணல் லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நால்வரும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர்.
இந்த கோர விபத்தில், ஜெகதீஷ் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் தனுஜா ஸ்ரீ, தருண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். சங்கீதா விபத்தில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிதுடித்துள்ளார்.
இதனைக்கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக அவசர ஊர்திக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சங்கீதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தில் பலியான ஜெகதீஷ், தனுஜா ஸ்ரீ, தருண் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kanchipuram Family Died Accident Near Thiruvallur Police Investigation 16 March 2021