பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம்: ஜே.பி. நட்டா பயண திட்டத்தில் திடீர் மாற்றம்! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் பா. ஜனதாவின் சார்பில் சென்னை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் நாளை காலை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு காலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக பயண நிகழ்ச்சி வகுக்கப்பட்டிருந்தது. 

ஆனால் அவர் திடீரென பயணத்திட்டத்தை மாற்றி காலை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஜே.பி. நட்டாவிற்கு பதிலாக அண்ணாமலையும், பொறுப்பாளர் தேசிய விநாயகம் பங்கேற்பார்கள். 

மாலை 5 மணி அளவில் நட்டா டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த பிறகு அமைந்தகரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JP Natta change travel plan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->