கடலூரில் முக்கிய புள்ளியின் பள்ளி மற்றும் நிதிநிறுவனத்தில் ஐ.டி., ரெய்டு.! அதிர்ச்சியில் அரசியல் கட்சி.! - Seithipunal
Seithipunal


தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி அதிமுக முன்னாள் அமைச்சர்கள், திமுகவை சேர்ந்த பிரமுகர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்ட தேமுதிக பிரமுகர் பிரமுகரும், தொழிலதிபருமான ஜெய்சங்கர் தொடர்புடைய பள்ளி மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதாச்சலத்தில் உள்ள அவருக்கு சொந்தமான ஒரு பள்ளி, நெய்வேலியில் உள்ள அவருக்கு சொந்தமான நிதிநிறுவனம் உள்ளிட்டவைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல தொழிலதிபராக வலம் வரும் ஜெய்சங்கர், தேமுதிக பிரமுகர் என்பதால், இது தேமுதிகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜெய்சங்கர் கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது வேட்பாளராக போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT RAIN IN DMDK VIP JEISANKAR SCHOOL


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->