திருச்சியில் விடிய விடிய நடந்த ஐடி ரெய்டு நிறைவு! சிக்கியது என்ன?! - Seithipunal
Seithipunal


திருச்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முதல் நடைபெற்ற வருமான வரி சோதனை இன்று காலை நிறைவு பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம், உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை சற்று முன்பு நிறைவடைந்துள்ளது.

நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கி சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த வருமான வரி சோதனை விடிய விடிய நடைபெற்றது.

துப்பாக்கி இந்த போலீஸ் பாதுகாப்புடன், 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த வருமான வரி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர் செய்தி இன்று மதியம் அல்லது இரவுக்குள் வெளியாகும் என்று தெரிய வருகிறது.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ளது.

இந்த சார் பதிவாளர் அலுவலகத்திலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT Raid Trichy And Thiruvallur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->