ஒரு மொழியை வளர்க்க மற்ற மொழிகளை அழிக்க முயற்சிப்பதா? சீமான் கடும் கண்டனம்!
Is it an attempt to destroy other languages to promote one language? Seeman's strong condemnation
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுவது தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாக இருப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:2014-15 முதல் 2024-25 வரை,சமஸ்கிருதம் – ₹2,532.59 கோடி,தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா (5 செம்மொழிகள்) – ₹147.56 கோடி மட்டும்,தமிழுக்கு ஆண்டுக்கு சராசரி ₹13 கோடி மட்டுமே,இது சமஸ்கிருதம் பெற்ற நிதியைவிட 22 மடங்கு குறைவு.
"பத்தாயிரம் பேர் கூட பேசாத சமஸ்கிருதத்தை வளர்க்க கோடிகள் கொடுப்பது ஏன்? தமிழைப் பேசியே வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு வெறும் ‘சொற்பொலிவே’ நிவாரணமா?"
அதிக அளவில் வரி செலுத்தும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசால் நியாயமற்ற புறக்கணிப்பு செய்யப்படுகிறது என்றும், இது இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சீமான் மேலும் கூறியதாவது:"ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு என ஒற்றைமயத்தை திணிக்க முயற்சிக்கின்ற இந்த மனப்பான்மை, நாட்டை ஏற்றும் பன்முகத்தன்மையை அழிக்கப் போகிறது.
ஒரே மொழி என்றால் நாடு துண்டாகும். பன்மொழிகள் இருந்தால்தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும்."அனைத்து செம்மொழிகளுக்கும் சமநிலை நிதி ஒதுக்கீடு வேண்டும்.தமிழுக்கு கடந்த ஆண்டுகளில் குறைவாக வழங்கப்பட்ட தொகையும் பூர்த்தியாக வழங்கப்பட வேண்டும்.
தேசிய மொழிகளாக அனைத்து 22 அரசியலமைப்புத் பட்டியலிலுள்ள மொழிகளும் அறிவிக்கப்பட வேண்டும்.“தமிழின் தொன்மை பேச வேண்டாம் – அதை நிதியிலும் நடத்தையிலும் காட்டுங்கள்,” என்று சீமான் கூறிய இந்த அறிக்கையில் , மத்திய அரசின் மொழிக்கொள்கையை எதிர்த்து கூறியுள்ளார்.
English Summary
Is it an attempt to destroy other languages to promote one language? Seeman's strong condemnation