திருநெல்வேலி.! மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் வெறிசெயலால் இரும்பு வியாபாரி கத்தியால் குத்தி கொலை.!
Iron merchant stabbed to death in Tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் வெறிச்செயல் இரும்பு வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே உள்ள நவ்வலடி மேலத்தெருவை சேர்ந்த முத்து என்பவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்பவர் ஆவார். முத்துவும், அப்பகுதியில் நடுத்தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பரும் நண்பர்கள்.
இவர்கள் 2 பேரும் தினமும் ஒன்றாக சேர்ந்து குடிப்பது வழக்கமாக இருந்த நிலையில், நேற்று இரவு ஒன்றாக இருவரும் மது அருந்திவிட்டு ஒரு ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.
அப்பொழுது முத்து, செல்வக்குமாரின் மனைவி குறித்து பேசியதால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் குடிபோதையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிய நிலையில் ஆத்திரமடைந்த செல்வகுமார், கத்தியால் முத்துவை சரமாரியாக கழுத்தில் குத்தியதால் சம்பவ இடத்திலேயே முத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், செல்வக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் தனது மனைவியை குறித்து பேசியதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
English Summary
Iron merchant stabbed to death in Tirunelveli