ஆற்றில் சடலமாக மிதந்த பச்சிளம் குழந்தை..! தீவிர விசாரணையில் போலீசார்..! அரியலூரில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் ஆற்றில் சடலமாக மிதந்த பச்சிளம் குழந்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் முண்டனார் கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆற்றில் மர்மமான ஒன்று மிதந்து வந்துள்ளது. இந்நிலையில் சிறுவர்கள் ஆற்றில் இறங்கி பார்த்தபோது, அது பிறந்து இரண்டு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரியவந்ததையடுத்து, திருமானூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குழந்தையை ஆற்றில் வீசியவர்கள் யார்? எதற்காக வீசினார்கள்? குழந்தை ஆற்றில் வீசி கொல்லப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Infant floating dead in the river in Ariyalur


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->