மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : ஒரே நாளில் 3 அடி உயர்வு!
Increase in water flow to the Mettur Dam A rise of 3 feet in just one day
கர்நாடக அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் ஒரே நாளில் 3 அடி தண்ணீர் உயர்ந்துள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது,இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 51 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீரும் மொத்தம் வினாடிக்கு 81 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 78 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துநேற்று காலை அணைக்கு வினாடிக்கு 43 ஆயிரத்து 892 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. மாலையில் நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரத்து 740 கன அடியாக அதிகரித்திருந்தது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது 73,452 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 115 அடியாக உயர்ந்தது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்தது. இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3 அடி அதிகரித்து.அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்பட்சத்தில் அணை முன்னதாக நிரம்பக்கூடும் என்று கூறப்படுகிறது.
English Summary
Increase in water flow to the Mettur Dam A rise of 3 feet in just one day