விவசாய நிலத்திற்கு சென்ற பெண் மாயமான வழக்கில் திடீர் திருப்பம்.! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே இருக்கும் பெரியபாபுசமுத்திரத்தில் இருக்கும் மோகன் என்ற விவசாயிக்கு தில்லைநாயகி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும், இருக்கின்றனர். தங்களுடைய விவசாய நிலத்திற்கு தில்லைநாயகி சென்று தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். அதுபோல நேற்று காலை விவசாய நிலத்திற்கு சென்ற தில்லைநாயகி மாலைவரை வீடு திரும்பவில்லை.

இதன் காரணமாக சந்தேகம் அடைந்த கணவர் தன்னுடைய உறவினர்களை அழைத்துக் கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கே மண்வெட்டி மற்றும் தில்லை நாயகியின் செருப்பு கிடைத்துள்ளது. ஆனால், அவரை காணவில்லை. காவல்துறையிடம் மோகன் புகார் அளித்தார்.

killed, murder, suicide attempt,

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பம்பை ஆற்றில் பகுதியில் புதரில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதனை பிரித்துப் பார்த்த காவல்துறையினர் உள்ளே தில்லை நாயகி உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பின்னர் அவருடைய உடலை எடுத்து பார்க்கையில் உடம்பில் பல்வேறு காயங்கள் இருந்தது. மர்மநபர்கள் யாரோ தில்லை நாயகியை கொலை செய்து மூட்டையில் கட்டி, புதரில் வீசி இருப்பது தெரியவந்துள்ளது. கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vilupuram girl killed case police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->