கள்ளக்காதல் உறவில் பிறந்த குழந்தை.. பச்சிளம் குழந்தைக்கு தாய் கொடுத்த விபரீத தண்டனை.!!
in vellore child killed due to illegal affair born
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுக்கத்தூர் ஆசானாம்பட்டு கள்ளப்பாறை பகுதியை பெருமாள் (வயது 46). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ஜெயலட்சுமி (வயது 28). இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கடந்த இரண்டு வருடமாக வசித்து வந்த நிலையில், இப்பகுதியை சார்ந்த ஹரிஷ் (வயது 26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டதை அடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இதனால் ஜெயலட்சுமி கர்ப்பமாகவே, கடந்த 20 ஆம் தேதியன்று பெண் குழந்தையும் பிறந்துள்ளது. கள்ளக்காதல் மூலமாக பிறந்த பெண் குழந்தையை கொலை சேட்டை திட்டமிட்ட தாய், கோணிப்பையில் குழந்தையை கட்டி அங்குள்ள விவசாய நிலத்தில் வீசியுள்ளார். தண்ணீரில் மூழ்கிய குழந்தை, சாக்குமூட்டையில் இறந்து கிடந்துள்ளது.
காலை நேரத்தில் சாக்குமூட்டையை கண்ட பொதுமக்கள் சோதனை செய்ததில், பச்சிளம் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்கூறிய தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஜெயலட்சுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை வளர்க்க அவமானப்பட்டு, குழந்தையை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in vellore child killed due to illegal affair born