காதலியின் கற்பை காப்பாற்றிய காதலனுக்கு, இறுதியில் நேர்ந்த பெரும் துயரம்..! திருச்சியில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக தொடர் குற்றங்களானது அதிகரித்து வருகிறது. திருச்சியில் உலா துவங்குடி என்.ஐ.டி கல்லூரியில் அதிகாலை சுமார் 3 மணியளவில் காதலனுடன் பேருந்து நிறுத்தத்தில் பேசிக்கொண்டு இருந்த காதலியை., காவல் துறை அதிகாரி என்று கூறிய கொடூரன் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தான். 

இதுமட்டுமல்லாது கடந்த ஜனவரி மாதத்தின் போது சமயபுரம் பகுதியில் இருந்த காட்டுப்பகுதிக்கு சென்றிருந்த காதல் ஜோடியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும்., தட்டி கேட்டு வந்த காதலனை கொலை செய்ததும் அரங்கேறியது. இந்த விசயத்திற்கு காரணமாக இருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். 

இந்த நிலையில்., தற்போது கொள்ளிடம் இரும்பு பாலத்தின் கீழே தனிமையில் பேசிக்கொண்டு இருந்த ஜீவித் - இந்து காதல் ஜோடியை., அதே பகுதியை சார்ந்த கஞ்சா அருந்தியிருந்த இளைஞர்கள் கோகுல்., கலையரசன் மற்றும் அவனது நண்பர்கள் அத்துமீறினர். காதலியை காக்கும் பொருட்டு காதலன் அங்கிருந்து தப்பித்து அனுப்பி வைத்துள்ளார். 

இதனையடுத்து போதையில் இருந்த கொடூரன்கள் தங்களின் ஆசையை நிறைவேற்ற விடாமல் சென்றதால் ஆத்திரமடைந்து ஜீவித்தை அடித்து ஆற்றுக்குள் வீசியுள்ளனர். மேலும்., ஆற்றில் நீர் அதிகமாக சென்று கொண்டு இருந்த நிலையில்., ஆற்றின் வேகத்தில் ஜீவித் இழுத்து செல்லப்பட்டு., இரண்டு நாள் போராட்டத்திற்கு பின்னர் தற்போது ஜீவித்தின் உடலை மீட்டுள்ளனர். இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy drug gang through boy died police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->