சொத்து தகராறில், இளம்பெண்ணின் வாயில் விஷத்தை ஊற்றிய தம்பதி... அரங்கேறிய பெரும் சோகம்...!!  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலத்தை அடுத்துள்ள கோணலூர் விழுப்புரம் பிரதான சாலையில் வசித்து வருபவர் ராமன் (வயது 45). இவர் விவசாயியாக பணி செய்து வருகிறார். இவரது மகளின் பெயர் ஜோதி (வயது 23). இவரது பக்கத்துக்கு வீட்டினை சார்ந்தவரின் பெயர் ரவி (வயது 49). இவர் விவசாயியாக பணி செய்து வரும் நிலையில், இவரது மனைவியின் பெயர் சரஸ்வதி (வயது 35). இவரது தம்பியின் பெயர் குமாரகிருஷ்ணன். 

ராமனின் விவசாய நிலமும், ரவியின் விவசாய நிலமும் அடுத்தடுத்து அமைந்துள்ளதால், இவர்களிடையே நிலம் சம்பந்தப்பட்ட தகராறு இருந்து வந்துள்ளது. மேலும், அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தருணத்தில், இன்று அதிகாலை நேரத்தில் ராமனின் மகள் ஜோதி வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். இவரிடம் ரவியின் குடும்பத்தின் தகராறில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்பின்னர் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போதே, பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து ஜோதியின் வாயில் ஊற்றியுள்ளனர். இதனையடுத்து ஜோதி கூச்சலிடவே, இவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமன் வெளியே வந்து பார்த்த நேரத்தில், ஜோதியின் வாயில் விஷத்தினை ஊற்றுவதை கண்டுள்ளனர். ராமனின் வருகையை கண்ட ரவியின் குடும்பத்தினர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். 

வாயில் விஷம் ஊற்றிய நிலையில் ஜோதி மயக்கமடையவே, இவரை மீட்ட தந்தை அங்குள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளார். ஜோதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக ராமன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvannamalai girl murder attempt due to land problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->