காதில் ஹெட்செட்டுடன் கல்லூரி மாணவர் உல்லாசப்பயணம்... விரைந்துவந்த விரைவு இரயில்... திருவள்ளூரில் பெரும் சோகம்.!!
in thiruvallur college student died crossing railway track with headset careless
தற்போதுள்ள காலகட்டத்தில் அலைபேசியின் தாக்கமானது நம்மிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அலைபேசி மற்றும் ஹெட்செட் இல்லாத நபர்களை இன்று விரல்விட்டு எண்ணும் சூழ்நிலை வந்துவிட்டது.
தேவையான இடங்களில் அலைபேசியை உபயோகம் செய்யும் காலம் மலையேறி, காதில் ஹெட்செட் கையில் அலைபேசி என்று சாலையில் நடந்து செல்லும் போதும், பேருந்து பயணத்தின் போதும் என நாம் அதிகளவில் இரண்டையும் உபயோகம் செய்து வருகிறோம்.
இந்த நிலையில், திருவள்ளூர் பகுதியை சார்ந்தவர் மிதுன். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் முதல் வருடம் பயின்று வருகிறார். இவர் எந்த நேரத்திலும் கையில் அலைபேசி மற்றும் ஹெட்செட் உபயோகம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், சமபவத்தன்று காதில் ஹெட்செட் போட்டு பாட்டுக்கேட்டுக்கொண்டே இரயில் தண்டவாளத்தை கடந்த நிலையில், சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்ற சதாப்தி விரைவு இரயிலானது மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thiruvallur college student died crossing railway track with headset careless