நாத்தனாரை கொலை செய்த அண்ணி.! விசாரணையில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகேயுள்ள சேமலைவலசு கிராம பகுதியை சார்ந்தவர் சீரங்கன். இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இவரது மனைவியின் பெயர் திருமாயி. இவர்கள் இருவருக்கும் கார்த்திக் என்ற மகனும்., கலைவாணி என்ற 8 வயதுடைய மகளும் உள்ளனர். 

இந்த தருணத்தில்., திருமாயி கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்த நிலையில்., சீரங்கன் மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் முடித்துள்ளார். இதன் காரணாமாக சீரங்கனின் மகன் மற்றும் மகள் சித்தி ஆராளின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். 

அங்குள்ள பள்ளியில் கலைவாணி 3 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில்., வலிப்பு நோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த தருணத்தில்., சிறுமியின் அண்ணனான கார்த்திக் ஷாமிலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

died, murder, killed, suicide attempt,

இந்த நிலையில்., கடந்த ஜூலை மாதத்தின் 17 ஆம் தேதியன்று கலைவாணி வீட்டில் இருந்து மாயமாகவே., இவரை பல்வேறு இடங்களில் தேடியும் காணவிலை. மறுநாள் காலையில் ஊருக்கு அருகில் இருக்கும் தோட்ட கிணற்றில் கலைவாணி பிணமாக மிதக்கவே., இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உடல்நலத்தினால் பாதிக்கப்பட்டு இருந்த மாணவி., தவறி விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்று வழக்குப்பதிவு செய்த நிலையில்., கலைவாணியின் இறப்பில் ஷாமிலி மீது சந்தேகம் இருப்பதாக கூறி கலைவாணியின் பாட்டி புகார் அளித்திருந்தார். 

இதனை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில்., கலைவாணிக்கு வலிப்பு இருப்பதால் அவருக்கு அதிக பணம் செலவு செய்து வந்ததாகவும்., கணவர் எனது தேவைக்கு பணம் கொடுக்காமல் அவருக்கு அதிகளவு செலவு செய்து வந்ததாகவும்., இது எனக்கு பிடிக்காததால் கிணற்றுக்கு அழைத்து சென்று அவரை கொலை செய்தேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து ஷாமிலி தற்போது கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirupur girl killed due to possessiveness


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->