நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரி - பேருந்து.. 9 பேர் துடிதுடித்து பலி.. திருப்பூரில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில், டைல்ஸ் கற்களை ஏற்றுக்கொண்ட கண்டைனர் லாரியொன்று வேகமாக சென்று கொண்டு இருந்துள்ளது. 

இந்த நிலையில், இந்த லாரியும், இதே சாலையில் எதிர்திசையில் வந்து கொண்டு இருந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த மூன்று பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். 

இதுமட்டுமல்லாது மேலும் பலர் காயமடைந்த நிலையில், இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் இது தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பலருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனைப்போன்று சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகேயுள்ள பகுதியில் சுற்றுலா பயணிகள் பேருந்தும் - எதிரே வந்த வேனும் மோதியதில் நேபாள நாட்டை சார்ந்த சுற்றுலாப்பயணிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 26 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirupur accident peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->