எனக்கு இல்லாததை நீங்கள் அனுபவிக்க கூடாது..! கணவனை கொளுத்திய மனைவியின் பகீர் தகவல்..!! நெல்லையில் பேரதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிகுளம் பகுதியை சார்ந்தவர் பாக்கியராஜ் (வயது 59). இவர் வெளிநாட்டில் தையல் தைக்கும் பணி செய்து வந்த நிலையில்., மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பாமல்., எட்டு வருடங்கள் வெளிநாட்டில் வசித்து வந்துள்ளார். பாக்யராஜிற்கு மரியலீலா என்ற மனைவியும்., இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ள நிலையில்., இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதன் காரணமாக ஊருக்கு திரும்பிய பாக்யராஜ்., தனது மனைவியுடன் வசித்து வராமல்., திருமணம் முடிந்த மகனுடன் வசித்து வந்துள்ளார். மேலும்., இவர்களை இல்லத்திலேயே இருக்கும் மற்றொரு அறையில் மரியலீலா தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சமயத்தில்., பாக்யராஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே., நடக்க முடியாமல் அவதியுற்று வந்துள்ளார். 

fire, தீக்குளித்த சோகம்,

மேலும்., தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இதன்படி நிலத்தினை அளக்கும் பணிகளை தொடங்கிய சமயத்தில்., மரியலீலா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மேலும்., சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த சமயத்தில்., கணவன் - மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து., பாக்யராஜ் மனைவியை அவதூறாக பேசியுள்ளார். இதனால் கடும் ஆத்திரத்துக்கு உள்ளான மரியலீலா மண்ணெண்ணெய்யை எடுத்து பாக்யராஜின் மீது ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார். தீ மளமளவென எறியதுவங்கியதை அடுத்து., பாக்யராஜ் அலறவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் விரைந்தனர். 

died, murder, killed, suicide attempt, கொலை, குற்றம், தற்கொலை,

இதனையடுத்து பாக்யராஜை மீட்ட மகன்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே., இந்த விஷயம் காவல் துறையினருக்கும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்கு பின்னர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., மனைவி சொத்திற்காக மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்ததை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். 

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகையில்., சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் நள்ளிரவில் உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து காவல் துரையினர் மரியலீலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirunelveli wife killed her husband police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->