தம்பி போல பழகி, பெண்களை மிரட்டி பணம் பறித்த டிக் டாக் சைக்கோ.. 10 செகண்ட் பாட்டால் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் பெண்கள்.!!
in tenkasi tic tok culprit arrest police
தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகேயுள்ள அருணாசலபுரம் சேர்ந்தமரம் பகுதியை சார்ந்தவர் செல்வராஜ். இவரது மகனின் பெயர் கண்ணன் (வயது 19). இவன் ஒன்பதாம் வகுப்புவரை மட்டுமே பயின்றுள்ள நிலையில், டிக் டாக் செயலியில் காதல் மன்னன் என்ற பெயரில் பல விடீயோக்களை பதிவு செய்துள்ளான்.
இவனின் கோமாளித்தனமான விடியோபதிவுகள், காதல் வசனங்கள் என நவரசகலைகளை பிழிந்து தள்ளியதால் இவனுக்கு நான்கு இலட்சம் பின் தொடர்பாளர்கள் கிடைத்துள்ள நிலையில், இதன் மூலமாக சல்லிக்காசு பிரயோஜனம் இல்லாத லைக்குகளை வாங்கி குவித்து வந்துள்ளான்.
இவன் கல்லூரிகளில் பயின்று வருவது போலவும், பாசம் கொண்ட மன்மதன் போலவும் சிறுமிகள், திருமணம் முடிந்த பெண்கள் என பலரையும் ஏமாற்றி பெண்களிடம் பழகி வந்துள்ளான். பின்னர் பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றி வீடியோ எடுத்து, மாபிங் செய்து மிரட்டி வந்துள்ளான்.
இவனது மிரட்டலுக்கு பயந்து போன பெண்கள் தனது மோதிரம், நகைகள் மற்றும் பணம் என கொடுத்து வந்த நிலையில், இவன் மீது நடவடிக்கை எடுக்க கூறி பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கண்ணனை கைது செய்தனர். இவனிடம் இருந்த அலைபேசி, மெமரி கார்டு மற்றும் பென் டிரைவ் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இவனுக்கு உடந்தையாக இருந்த நண்பர்களையும் தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in tenkasi tic tok culprit arrest police