கள்ளகாதலனுக்கு தெரியாமல் மற்றொரு கள்ளக்காதலில் உல்லாசம் அனுபவித்த பெண்.! இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட முதல் கள்ளக்காதலன்.!!
in selam woman killed by her illegal affair friend police investigation going on
சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் சேலம் - கரூர் இரயில் தண்டவாளத்தின் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி வாசிகள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில்., இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., கொலையான பெண் அங்குள்ள புத்தூர் மாரியம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் என்பதும்., இவருடைய கணவரின் பெயர் சாமிநாதன் என்பது., இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது.
இந்த நிலையில்., கணவன் மனைவிக்கும் இடையே கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட தகராறை அடுத்து முன்னியம்மாள் தனியாக வசித்து வந்த நிலையில்., குழந்தைகளை முனியம்மாள் பெற்றோரின் இல்லத்தில் விட்டுவிட்டு கட்டிட வேலைக்கு சென்று வரும் வழக்கத்தை வைத்துள்ளார். இந்த சமயத்தில்., அதே பகுதியை சார்ந்த நபரான செந்தில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில்., இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுமட்டுமல்லாது இருவரும் கணவன் - மனைவி போன்று வசித்து வந்த நிலையில்., இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.
இருவரும் சில சமயம் மது அருந்திவிட்டு போதையில் சண்டையிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களின் சண்டையை பார்த்த வீட்டின் உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேற கூறியதை அடுத்து., வேறொரு வீடுபார்த்து குடியேறியுள்ளனர். பின்னர் அங்கும் மேற்பட்ட பிரச்சனையை அடுத்து., கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக வேறொரு வீடு பார்த்து குடியேறியுள்ளனர். இந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததால்., வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு இவர்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த செய்தியானது முதல் கள்ளக்காதலனான செந்திலுக்கு தெரியவரவே., இது குறித்து இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இவர்களின் வாக்குவாதம் கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகரித்த நிலையில்., செந்தில்குமார் முனியம்மாள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சம்பவ இடத்தியிலே துடிதுடித்து உயிரிழந்த முனியம்மாள் சடலத்தை அங்குள்ள இரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தற்போது தலைமறைவாக இருக்கும் செந்தில்குமாரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in selam woman killed by her illegal affair friend police investigation going on