மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த கொடூரன்..! மரண பீதியில் சிறப்பாக செயல்பட்ட விதி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே இருக்கும் கணவாய் புதூர் ஊராட்சி - கே.மோரூர் பகுதியை சார்ந்தவர் மகாலிங்கம் (வயது 54). இவர் இதே பகுதியில் விவசாயம் பார்த்து வரும் நிலையில்., கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணையில்., மகாலிங்கம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான். 

sexual harassment, sexual abuse, sexual torture,

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை சேலம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., விசாரணைகள் அனைத்தும் நிறைவு பெற்று கடந்த 11 ஆம் தேதி முடிவடைந்தது. 

இந்த வழக்கு விசாரணையின் இறுதி தீர்ப்பானது வரும் நவம்பர் 7ஆம் தேதி வழங்குவதாக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளியாக கருதப்பட்ட மகாலிங்கம் தனக்கு தண்டனை கிடைத்து விடும் என்ற பயத்தில் இருந்து வந்துள்ளான். 

died, murder, killed, suicide attempt.

இந்த நிலையில்., நேற்று மாலையில் போது வீட்டில் இருந்த மகாலிங்கம் உள்புறமாக தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இரவு வெகுநேரமாகியும் இவரது வீட்டின் கதவு திறக்கப்படாததால்., சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இவரது வீட்டிற்குள் சென்றுள்ளனர். 

இவரின் அறைக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து காவல் துறைக்கு உறவினர்கள் தகவல் தெரிவிக்கவே., சம்பவ இடத்திற்கு விரைந்து மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam mentally affected girl rap case culprit attempt suicide and died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->