கள்ளக்காதல் ஜோடியின் உல்லாசத்தின் போது பசியால் கதறிய ஒன்றரை வயது குழந்தை.! ஈவு இரக்கமின்றி கொலை செய்த கள்ளக்காதலன்.!!
in sankarankovil illegal affair end baby killing police investigation going on
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை பழங்கோட்டை பகுதியை சார்ந்தவர் ராஜு. இவர் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சார்ந்த காவல் துறை அதிகாரியான செல்லையா என்பவரின் மூத்த மகளான வடகாசி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்திருந்தார்.
இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை இருக்கும் நிலையில்., வடகாசி வீட்டிற்கு பால் கொண்டு சென்று ஊற்றும் பணிசெய்து வந்துள்ளார். இந்த நேரத்தில் பால் விபரியான சாமிநாதன் என்பவனுக்கும் - வடகாசிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து., இருவரும் ராஜு இல்லாத சமயத்தில் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
சாமிநாதனிற்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்., கள்ளக்காதல் மோகத்தால் கள்ளகாதலியுடன் வாடகைக்கு வீடெடுத்து தங்கி இருந்து வந்துள்ளான். இந்த சமயத்தில்., கடந்த செவ்வாய்க்கிழமை வடகாசி - சாமிநாதன் தலையில் அடிபட்ட ஆண் குழந்தையுடன் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று., குழந்தை மாடிபடியில் இருந்து விழுந்து மயங்கியதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தையை உடனடியாக சிகிச்சைக்கு அனுமதி செய்து சிகிச்சையளித்து பின்னர் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சமயத்தில்., குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டுள்ள அடையாளத்தை மருத்துவர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., வடகாசியின் கணவரான ராஜுவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால்., இரவு பணி என்று கூறி அங்குள்ள பகுதிகளில் மது அருந்திவிட்டு காலையில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். பின்னர் வழக்கம்போல பணிக்கும் சென்று வந்துள்ளனர். இந்த நிலையில்., வடகாசி மட்டும் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில்., சாமிநாதனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இதே ஊரில் மற்றொரு வீடு வாடகைக்கு எடுத்து இருவரும் தங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விசயத்திற்கு வசதியாக சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னதாக தனது ஒன்றரை வயதுடைய குழந்தையுடன் சங்கரன்கோவிலில் இருக்கும் மாமியாரின் இல்லத்திற்கு சென்ற வடகாசி., சில காரணத்தை கூறி குழந்தையை அவர்களுடன் விட்டுவிட்டு வந்துள்ளார்.
இந்த நேரத்தில்., இரவு பணிக்கு செல்வதாக கூறி சென்ற ராஜு., கள்ளக்காதல் ஜோடிகள் இருவரையும் பார்த்து பின்தொடர்ந்த நேரத்தில்., இவர்களின் கள்ளகாதல் உறவும்., இவர்களின் உறவை வளர்க்க வாடகை வீடும் தெரியவந்துள்ளது. இதனை அறிந்த ராஜு தனது மனைவியை கண்டிக்கவே., அவர் கள்ளக்காதல் உறவை கைவிடாமல் இருந்து வந்துள்ளனர். மேலும்., தொந்தரவு அளித்தால் குழந்தையை கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து கள்ளக்காதல் மோகத்தால் கணவனை கொலை செய்ய திட்டமிட்ட வடகாசி., கூலிப்படை மூலமாக ராஜூவை கொலை செய்ய திட்டமிட்டு ரூ.10 ஆயிரத்தையும் சாமிநாதன் வழங்கியுள்ளான். இந்த நேரத்தில்., குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் குழந்தையை பார்க்க வடகாசியிடம் அனுமதி கேட்ட பின்னர்., குழந்தையை அழைத்து வந்து வடகாசி காண்பித்துள்ளார்.
இதற்குப்பின் ராஜு பணிக்கு செல்லவே., தனது ஒன்றரை வயதுடைய குழந்தையுடன் கள்ளக்காதலன் சாமிநாதனை சந்திக்க வடகாசி சென்றுள்ளார். குழந்தை அழாமல் இருப்பதற்கு தொட்டில் போட்டு குழந்தையை தொட்டிலில் தூங்கவிட்ட நிலையில்., அதிகாலை மூன்று மணியளவில் குழந்தை பசியால் அழுதுள்ளது. இதனை கேட்டு ஆத்திரமடைந்த சாமிநாதன் குழந்தையை தொட்டிலோடு சுவற்றில் அடித்துள்ளான். இதனால் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த நிலையில்., அதிகாலை வீட்டிற்கு திரும்பிய ராஜு., குழந்தை மற்றும் மனைவியை தேடவே., இருவரும் இல்லத்தில் இல்லாததால் மாமனாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாமனார் குழந்தையுடன் வடகாசி நேற்று மாலையே வீட்டிற்கு புறப்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து கள்ளகாதலன் சாமிநாதனின் மீது சந்தேகம் அடைந்து., சாமிநாதனின் இல்லத்திற்கு சென்ற சமயத்தில்., குழந்தை பசிக்காக அழுத்தும்., இருவரின் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
முதலில் இருவரும் அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்று குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கதையளந்ததை கண்டறிந்த மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., இருவரும் முன்னெச்சரிக்கையாக பேருந்தில் புறப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து இதே பதிலை கூறியுள்ளனர். மருத்துவரின் சாமர்த்தியத்தால் கள்ளக்காதல் ஜோடிகள் மாற்றிக்கொண்டனர். மேலும்., ராஜு குழந்தை இறந்த துக்கத்தில் இருந்து மீளாமல் இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in sankarankovil illegal affair end baby killing police investigation going on