பெண் போக்குவரத்து ஊழியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பம்.! வெளியான பேரதிர்ச்சி கடிதம்..!! - Seithipunal
Seithipunal


தமிழத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டூரணி பகுதியை சார்ந்தவர் நம்புராஜன். இவரது மனைவியின் பெயர் ஷோபனா (வயது 41). இவர் இராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக புறநகர் பிரிவில்., இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்., நேற்று பணிக்கு வழக்கம்போல சென்ற ஷோபனா மீண்டும் வீடு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் நம்புராஜன் மற்றும் அவரின் உறவினரால் ஷோபனாவை தேடியலைந்த நிலையில்., ஷோபனா எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

died, killed, murder, suicide attempt,

இந்த சமயத்தில்., காட்டூரணி பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட குடிநீர் கிணற்றில் பெண்ணின் பிணம் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

அந்த விசாரணையில்., கிணற்றில் பிணமாக இருந்த பெண் ஷோபனா என்பது தெரியவந்தது. இது குறித்து ஷோபனாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., இந்த தற்கொலை தொடர்பாக குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சமயத்தில்., சோபனாவின் கைப்பட எழுதியிருந்த கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. 

ramnad, ramanathapuram, ramnad govt staff suicide attempt,

அந்த கடிதத்தில்., ஷோபானாவுடன் பணியாற்றி வந்த 3 பெண் ஊழியர்களின் தொடர் துன்புறுத்தலின் காரணமாக தற்கொலை முடிவு எடுத்திருப்பதாகவும்., எனது தற்கொலைக்கு காரணமான உயரதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்., பிற பணியாளர்கள் முன்னிலையில் வைத்து ஆபாசமாக பேசி திட்டியதாகவும் ஷோபனா எழுதியுள்ளார். 

மேலும்., ஷோபனாவின் ஏ.டி.எம் அட்டையின் இரகசிய எண் மற்றும் நகைகள் உள்ள இடம் என அனைத்தையும் குறிப்பிட்டு., ஷோபனாவின் மகளை நன்றாக பார்த்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பான விசாரணையை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ramanthapuram govt staff attempt suicide due to higher official torture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->