கண்மாயில் உல்லாசம்.. பாயிண்ட் டு பாயிண்ட் கைலாசம்.. இராமநாதபுரத்தில் பகீர்.!!
in ramanthapuram girl killed due to illegal affair
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை அருகேயுள்ள சீர்தாங்கி கிராமத்தை சார்ந்தவர் அமல்செல்வி (வயது 40). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில்., தனது கணவரை பிரித்து மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இவர் கடந்த நவம்பர் மாதத்தின் 8 ஆம் தேதியன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்று நிலையில்., மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இவரை காத்து பல நாட்கள் தேடி அலைந்தும் இவரை காணாது., கடந்த நவம்பர் மாதத்தின் 23 ஆம் தேதியன்று திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., அவருடன் பழகிய நபர்களின் பட்டியலை சேகரித்துள்ளனர். இந்த நேரத்தில்., தேவகோட்டை அருகேயுள்ள சித்தானுர் சமத்துவபுரம் பகுதியை சார்ந்த கண்ணன் (வயது 45) என்பவரின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து கண்ணனை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில். அமலச்செல்வியை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில்., கண்ணன் கொத்தனாராக பணியாற்றி வந்த நேரத்தில் அமல்செல்வியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக விபத்தில் சிக்கிய கண்ணனிற்கு கால்முறிவு ஏற்பட்டு நடக்க இயலாமல் போயுள்ளது. இந்த தருணத்தில் அமலச்செல்விக்கு பிற ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனை அறிந்த கண்ணன் அமலச்செல்வியை கண்டித்த நிலையில்., இதனை ஏற்க அமலச்செல்வி மறுத்துள்ளார்.
பின்னர் நாளடைவில் கண்ணனுக்கு கால்கள் குணமாவுடன் தேவகோட்டைக்கு அடுத்துள்ள ராஜாகோட்டை கண்மாய்க்கு அமலச்செல்வியை அழைத்து சென்று இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு பின்னர் பிற ஆணுடன் கொண்ட பழக்கத்தை கைவிட கூறி கண்ணன் தெரிவித்துள்ளார். மீண்டும் இதனை அமலச்செல்வி ஏற்க மறுத்துள்ளார்.
இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில்., கீழிருந்த கம்பியை கொண்டு கள்ளகாதலியின் தலையில் தாக்கவே., இரத்த வெள்ளத்தில் அமலச்செல்வி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கேயே அவரின் உடலை குழிதோண்டி புதைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அமலச்செல்வி புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று அவரின் உடலை மீட்டனர். மேலும்., அவரின் தலைமுடி மட்டும் வெளியே தெரிந்தபடியும்., மீதமுள்ள உடல் முழுவதுமாக அழுகி எலும்புடன் இருந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in ramanthapuram girl killed due to illegal affair