அடர்ந்த காட்டுப்பகுதியில் சடலமாக பெண்.. உடல்முழுவதும் இரத்த காயங்கள்.. புதுக்கோட்டையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புத்தாம்பூரை பகுதியை சார்ந்தவர் முருகேசன். இவரது இரண்டாவது மனைவியின் பெயர் பானுமதி. இவர்கள் இருவருக்கும் சொந்தமாக ஆடு உள்ள நிலையில்., வழக்கமாக அங்குள்ள ஆர்.எஸ்.பதி காட்டுப்பகுதிக்கு ஆடுமேய்க்க செல்வது வழக்கம். 

தினமும் பானுமதி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று., பின்னர் மாலையில் வீட்டிற்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில்., சம்பவத்தன்று காலையில் ஆடுமேய்க்க சென்ற பானுமதி மாலையில் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் காட்டுப்பகுதிக்கு சென்று தேடிய நேரத்தில்., பானுமதியின் உடலானது இரத்த வெட்டுக்காயத்துடன் சடலமாக கிடந்துள்ளது. இதனை கண்டு குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

puthukottai woman murder,

இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே., தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பானுமதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும்., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கிய நிலையில்., சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் செருப்பும் தொப்பியும் கிடைத்துள்ளது. இதனையடுத்து இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthukottai girl murder police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->