கள்ளக்காதல் மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த தாய்.! தாயாரின் உடல் அருகே குழந்தைகள் செய்ததை பார்த்து கதறியழுத உறவினர்கள்.!!
in puthuchery girl killed by her illegal affair activities
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குமரகுரு பள்ளத்தை சார்ந்தவர் கீதா (வயது 35)., இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவரது கணவரான இராஜுவுடன் இவர் வசித்து வந்த நிலையில்., இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து பிரிந்து சென்றார்.
இந்த நிலையில்., கீதா தனது குழந்தைகளுடன் அங்குள்ள ஜெயராம் நகரில் வசித்து வரும் சூழ்நிலையில்., அதே பகுதியில் தட்டு வண்டி தொழிலாளி ஆனந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த சமயத்தில்., இருவரும் கணவன் - மனைவியை போன்று சேர்ந்து வாழ்ந்து குடும்பம் நடத்தி வந்த நிலையில்., நேற்று மதியம் சுமார் 1 மணியின் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு வாய் தகராறாக முற்றியதை அடுத்து., ஆத்திரமடைந்த ஆனந்த் கத்தியை வைத்து கீதாவை சரமாரியாக குத்தியுள்ளார். கீதாவின் அலறல் சத்தத்தை கேட்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் விரையவே., இதனை கண்ட ஆனந்த் இல்லத்தில் இருந்து தப்பியோடினர்.
இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கீதாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொண்டு இருந்த நிலையில்., வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து., கீதாவின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய ஆனந்தை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்., உயிரிழந்த தாயின் அருகே ஒரு குழந்தை செய்வதறியாது விளையாடிக்கொண்டும்., ஒரு குழந்தை தாயின் உடல் அருகே கதறியழுத காட்சியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
in puthuchery girl killed by her illegal affair activities