சிறுமியை சீரழித்த கொடூர ஆசிரியர்.! உடந்தையாக தேவாலய நிர்வாகம்.. அப்பா..!! இறுதியில் அரங்கேறிய பெரும் சோகம்.!!
in neelgiri girl sexual torture by teacher police investigation going on
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகேயுள்ள கராத்தே பயிற்சியாளராக இருந்து வருபவரின் பெயர் சாபு ஆப்ரஹாம். இவரிடம் இதே பகுதியை சார்ந்த மாணவியொருவர் 11 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில்., இவரிடம் கராத்தே கற்றுக்கொண்டுள்ளார். இந்த தருணத்தில்., காம கொடூரன் சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கி வந்துள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவிக்கவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்., பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதுமட்டுமல்லாது தேவாலய கமிட்டியிடமும் புகாரை அளித்துள்ளார். இந்த புகார் மனுக்கள் குறித்து இரு தரப்பில் இருந்தும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதனையடுத்து சிறுமியின் தாயார் இது குறித்து தனது கணவரிடம் தெரிவிக்கவே., இந்த விஷயம் வெளியே சொல்ல வேண்டாம் என்று கண்டித்துள்ளார். இதனால் சிறுமியின் தாய் - தந்தைக்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்ற தருணத்தில்., சிறுமியின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மாணவியையும் - அவரது தாயாரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் கடுமையான பாதிப்படைந்த மாணவி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்., சிறுமியின் தாயார் இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து மாணவியின் தந்தை., சித்தப்பா மற்றும் அவர்களின் ஆதரவாளர் நான்கு பேர்., பாலியல் தொல்லை அளித்து வந்த கொடூர ஆசிரியன் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in neelgiri girl sexual torture by teacher police investigation going on