கள்ளக்காதலியை மனைவியுடன் சேர்ந்து கொலை செய்த கொடூரம்.! காவல் துறையினரிடம் நாடகமாடிய சம்பவத்தால் வெளியான பகீர் தகவல்.!!  - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தனியார் தங்கும் விடுதியில் பெண்ணொருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்ட விடுதி ஊழியர்கள் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் கடந்த சனிக்கிழமையன்று பெண்ணொருவரை கைது செய்து நிலையில்., அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில்., காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பனையூரை சார்ந்தவர் அருளானந்தம். இவர் கடந்த ஜூன் மாதத்தின் 25 ஆம் தேதியன்று வேளாங்கண்ணியில் இருக்கும் விடுதியில் இரண்டு பெண்களுடன் அறையெடுத்து தங்கியுள்ளார். 

கொலை செய்யப்பட்ட கவிதா

பின்னர் இரண்டு நாட்கள் கழித்தும் அறை திறக்கப்படாமல் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த விடுதி கண்காணிப்பாளர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அந்த சமயத்தில்., சுமார் 40 வயதுடைய பெண் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து விடுதியில் இறந்து கிடந்தவர் தஞ்சாவூர் பர்மா காலனி பகுதியை சார்ந்த கவிதா என்பதும்., இவரை கொலை செய்த நபர்கள் அருளானந்தம் மற்றும் அவரது மனைவி சுமதி என்பதும் தெரியவந்தது. 

மேலும்., வாங்கிய கடனை வழங்காததால் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்., அருளானந்தத்திற்கும் - கவிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்த சமயத்தில்., கவிதா தனது செலவிற்கு தேவையான பணத்தை வாங்கி வந்துள்ளார். இந்த சமயத்தில் அடிக்கடி பணம் வாங்குவது அருளானந்தம் விரக்தியடைய வழிவகுத்துள்ளது. 

இந்த விசயம் குறித்து தனது மனைவியான சுமதியிடம் தெரிவிக்கவே., இருவரும் சேர்ந்து கவிதாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இவர்களின் திட்டப்படி கவிதாவை கடந்த 27 ஆம் தேதியன்று வேளாங்கண்ணியில் இருக்கும் விடுதிக்கு அழைத்து வந்த நிலையில்., கவிதா ரூ.1 இலட்சம் பணம் வழங்கினால் சென்றுவிடுவதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இருவரும் கவிதாவை தாக்கியதில்., சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்ட நிலையில் அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் கணவனும் - மனைவியும் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து சென்றுள்ளனர். இந்த விசயமானது தெரியவந்ததை அடுத்து தலைமறைவாக இருக்கும் அருளானந்தத்தை தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in nagapattinam girl killed due to illegal affair police investigation report shocked


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->