17 வயது சிறுமியை நாடகக்காதலால் சீரழித்த ஆசிரியர்.. ஒருதலைக்காதல் கொடூரத்தால் அரங்கேறும் கொடூரம்.!!
in madurai two drama love culprits search by police girl harassment
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள எம்.கல்லுப்பட்டி பகுதியை சார்ந்தவர் செல்வம் (வயது 35). இவர் மல்லபுரம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இதே பகுதியில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி., ஆசிரியராக பணியாற்றி வரும் செல்வத்திடம் டியூஷன் படிக்க சென்றுள்ளார். இந்த சமயத்தில் சிறுமியிடம் செல்வம் திருமண ஆசை காட்டி நாடககாதலால் வீழ்த்தியுள்ளான்.
இவனது பேச்சு வார்த்தைகளால் மயங்கிய சிறுமி., இவனது சுயரூபம் தெரியாமல் இருக்கவே., திருமண ஆசையும் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்து இருந்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்., இதனைப்போன்று அங்குள்ள சமயபுரம் பகுதியில் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள சமயபுரம் பகுதியை அடுத்துள்ள தொடனேரி மேலத்தெரு பகுதியை சார்ந்தவர் ராஜேஷ். இவன் அப்பகுதியில் வசித்து வரும் 11 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளான்.
மேலும்., அவ்வப்போது சிறுமியிடம் சென்று தனது காதலை வெளிப்படுத்திய நிலையில்., சிறுமி இவனது காதலை ஏற்க மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில்., இன்று காலை சிறுமி வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் சிறுமியை இடைமறித்த நாடகக்காதலன் ராஜேஷ்., சிறுமியிடம் மீண்டும் காதலை கூறி திருமணம் செய்யலாம் என்று கூறியுள்ளான். இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததை அடுத்த கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளான்.
இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான சிறுமி பெற்றோரிடம் விஷயத்தை தெரிவிக்கவே., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியை மிரட்டிய நாடகக்காதலனின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in madurai two drama love culprits search by police girl harassment