தங்கையுடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்த வாலிபனை வெட்டி சாய்த்த அண்ணன்..! மதுரையில் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மேல அனுபாண்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவரது மகனின் பெயர் ரமேஷ் (வயது 30). இவர் பால் வியாபாரம் செய்து வந்த நிலையில்., இவருக்கு திருமணம் முடிந்து உள்ளது. 

இவர் தற்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதே பகுதியை சார்ந்த குருசாமி என்பவரின் மகளான காளீஸ்வரி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியதை அடுத்து., இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விசயமானது காளீஸ்வரியின் தம்பிக்கு தெரியவரவே., இதனால் காளீஸ்வரியின் தம்பி செல்வத்திற்கும் - ரமேஷிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

illegal affair, affair, couple enjoy,

இருப்பினும் கள்ளக்காதல் உறவில் இருவரும் திளைத்து., அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., ஆத்திரமடைந்த செல்வம் தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து., வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த ரமேஷை சரமாரியாக வெட்டிசாய்ந்தனர். 

பலத்த அலறலுடன் உயிரிழந்த ரமேஷின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும்., இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai man murder due to illegal affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->