சொந்த மாமனாரை நடு ரோட்டில் இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்ட மருமகன்..! மதுரையில் பட்டப்பகலில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அலங்கம்பட்டியை சார்ந்தவர் தங்கையா. இவரது மகளின் பெயர் தனலட்சுமி. இவருக்கும் - இதே பகுதியை சார்ந்த நல்லமணி என்பவருக்கும்., கடந்த 14 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. 

கணவன் - மனைவிக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில்., இவர்கள் இருவரும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னதாக பிரித்து வாழ துவங்கியுள்ளனர். 

இதற்கு பின்னர்., இருவரும் விவாகரத்து கேட்டு மேலூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இது குறித்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில்., இன்று விசாரணைக்காக மேலூர் வந்த தங்கையா., பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். 

died, murder, killed, suicide attempt, died body,

இந்த சமயத்தில்., மது போதையில் சம்பவ இடத்திற்கு வந்த நல்லமணி., தனது மாமனாரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த தங்கையா., சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயத்தை கவனித்து அதிர்ச்சியான ஆட்டோ ஓட்டுநர் நல்லமணியை பிடித்து வைத்துக்கொண்டார். பின்னர் இந்த சம்பவம் குறித்து மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நல்லமணியை கைது செய்தனர். இந்த விஷயம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Madurai man killed her wife father due to family problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->