கல்லூரி மாணவியை நாடக காதலால் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மகன்..! உடந்தையாக தாய் - தந்தை..!!
in Madurai girl kidnapped and rapped by drama love
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரை அடுத்துள்ள திருவாதவூர் பகுதியை சார்ந்தவர் எல்லப்பன். இவரது மகள் மதுரை தல்லாகுளத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் நர்சிங் துறையில் பயின்று வருகிறார். இவர் நர்சிங் துறையில் பயின்று இருக்கும் சமயத்திலேயே., அங்குள்ள புதூர் மருத்துவமனைக்கு சென்று பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நேரத்தில்., அங்கு நோயாளியாக சிகிச்சை பெற வந்த உத்தப்புரம் பகுதியை சார்ந்த ராமர் என்பவரின் மகனான இராஜேஸ்வரன் மாணவிக்கு காதல் வலை விரித்துள்ளான். இவனது பேச்சில் விழுந்த மாணவியும் - நாடக காதல் இராஜேஸ்வரனும் காதல் செய்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் அங்குள்ள பகுதியில் அவ்வப்போது ஊர் சுற்றி வந்த நிலையில்., நாடக காதலை வளர்ந்து இராஜேஸ்வரன் வளர்த்து வந்துள்ளான். இந்த நிலையில்., கடந்த 11 ஆம் தேதியன்று மாணவியை தனது இல்லத்திற்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளான். அவனது இல்லத்தில் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது.
இந்த தகவலை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து மகளை தன்னுடன் அனுப்பி வைக்க கூறி முறையிட்டுள்ளனர். இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பின்னர் மாணவியை பெற்றோர் அழைத்து வந்துள்ளனர். இந்த நேரத்தில்., நேற்று மாணவி அவரது இல்லத்தில் இருந்த நிலையில்., வீட்டிற்கு வந்து மாணவியை கடத்தி சென்று தனது இல்லத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு நாடக காதல் ராஜேஸ்வரன் மற்றும் அவனது தாயார் ஈஸ்வரியை கைது செய்தனர். மேலும்., மாணவியை கடத்தி செல்ல உதவியாக இருந்த ராமர் மற்றும் அழகம்மாளளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Madurai girl kidnapped and rapped by drama love