மனைவி மரணித்தும் அவளது வார்த்தைகள் நீங்காத நினைவில்... இரண்டு குழந்தைகளுடன் தந்தை எடுத்த விபரீத முடிவு.!!
in madurai father mercy kill son and attempt suicide
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் அருகேயுள்ள அரியூர் கிராமத்தை சார்ந்தவர் சுந்தர் (வயது 42). இவர் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவியின் பெயர் இந்துமதி (வயது 35). இவர்கள் இருவருக்கும் சுனில் என்ற 13 வயதுடைய மகனும், விமல் என்கிற 9 வயதுடைய மகனும் இருக்கின்றனர்.
இந்நிலையில், இந்துமதிக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், இதற்காக பல மருத்துவமனைக்கு சென்றும் பலனில்லாமல் இருந்துள்ளது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதி செய்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்துமதியின் மரணமாக சுந்தருக்கு பெரும் சோகத்தை வழங்கியுள்ளது. மேலும், விரக்தியுடன் தனது மகன்களுடன் வாழ்க்கையை தொடர்ந்து வந்துள்ளார். என்னதான் மகன்களுடன் வெளியே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாலும், சுந்தரின் மனதில் மனைவியின் இறப்பு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.
இதனையடுத்து தற்கொலை செய்ய முடிவெடுத்த சுந்தர், தனது தற்கொலைக்கு பின்னர் மகன்களின் நிலையை எண்ணி மனம் வருந்தியுள்ளார். இதனையடுத்து தனது மகன்களுக்கு நேற்றிரவு வாழைப்பழத்தில் குருணை மருந்தை கலந்து கொடுத்து தானும் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குருணை மருந்து கலந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட மூவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழக்கவே, இவர்களின் வீட்டு வாயில் நீண்ட நேரம் திறக்கப்படத்தால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே செல்கையில் விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in madurai father mercy kill son and attempt suicide