நடுரோடு தான் பெட் ரூம்.. குடிகார சுப்பனின் அலப்பறை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள கருப்பாயூரணி - மதுரை சாலையில் இருக்கும் மதுபான கடையில் தினமும் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் முதல் இளைஞர்கள் வரை என அனைவரும் மது வாங்கி, மதுபான கடைக்கு அருகிலேயே அமர்ந்து குடித்துவிட்டு மதுபோதையில் அடாவடி செய்து வருகின்றனர். 

தினமும் அப்பகுதியில் குடிமகன்களின் அடாவடி அதிகரித்துள்ள நிலையில், மது அருந்திய ஒரு குடிகாரர் கருப்பாயூரணி சாலையில் நடுரோட்டில் படுத்து, கால்மேல் கால் போட்டுக் கொண்டு இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகன ஓட்டிகளை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கும் வகையில் நடுரோட்டில் படுத்து அலப்பறை செய்துள்ளார். இதனை தடுக்க ஒருவரும் முன்வராத நிலையில், காவல் துறையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது. 

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த குடிகாரரின் அட்டூழியம் தொடர்ந்த நிலையில், மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வேறு இடத்திற்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில், இவ்வழியாக வந்த லாரி குடிமகனின் அலப்பறையை பார்த்து அமைதியாக சென்றது. 

மேலும், லாரி அருகே செல்வதை உணர்ந்தும் எந்தவிதமான பயமும் இல்லாதவாறு சாலையின் நடுவே உருண்டு பிரண்டு அலப்பறை செய்தார். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், காவல் துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன் வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Madurai Drunken Monkey Atrocity in road


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->