வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.! நீதிபதியின் தீர்ப்பு.!!
in krishnagiri girl sexual harassment court order
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை அடுத்துள்ள நாரிபுரம் கிராமத்தை சார்ந்தவர் சீனப்பா (வயது 65). இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு 13 வயதுடைய வளர்ப்பு மகள் இருந்த நிலையில்., இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில்., கடந்த 2017 ஆம் வருடத்தின் போது பிப்ரவரி மாதத்தில் பள்ளியில் சோர்வாக இருந்துள்ளார்.
இவரை கண்ட ஆசிரியர்கள் சிறுமியை தனிமையில் அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில்., சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சிறுமி தெரிவித்த சமயத்தில்., சிறுமி வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது..
மேலும்., சிறுமியை பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும்., இந்த கொடூரத்திற்கு நாகேஷ் (வயது 40) என்ற கொடூரனும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அறிந்து ஆசிரியர்கள் அதிர்ச்சியாகினர்.
இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சீனப்பா மற்றும் நாகேஷை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சீனப்பாவிற்கு 35 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.31 ஆயிரம் அபராதம் மற்றும்., நாகேஷிற்கு 12 வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in krishnagiri girl sexual harassment court order