கிருஷ்ணகிரி தொழிலதிபர் கடத்தல் விவகாரத்தில் பேரதிர்ச்சி தகவல்... கைதான பெருங்குற்ற கும்பல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை சார்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவரது மாமனாரின் இல்லம் சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் இருக்கிறது. இங்கு அவ்வப்போது சத்தியமூர்த்தி சென்று வருவது வழக்கமான ஒன்றாகும். 

இந்த நேரத்தில், சத்தியமூர்த்திக்கு இப்பகுதியை சார்ந்த கார்த்திக் என்ற நபர் பழக்கமாகியுள்ளார். இதனையடுத்து சத்தியமூர்த்தி கார்த்தியிடம் ஓசூரில் நிலம் வாங்கி வீடு காட்டுமாறு கூறியுள்ளார். இதனை ஏற்ற கார்த்திக் நிலத்தை வாங்கி கொள்வதாக கூறிவிட்டு சேலத்திற்கு வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதியன்று சத்தியமூர்த்தியை அலைபேசியில் தொடர்பு கொண்ட கார்த்திக், நிலத்தை வாங்க ரூ.2 இலட்சம் முன்பணம் தருவதாகவும், இது தொடர்பாக பேசுவதற்கு சேலத்திற்கு வருமாறும் கூறியுள்ளனர். இதனை கெட சத்தியமூர்த்தி சேலத்திற்கு சென்ற நிலையில், கார்த்திக் அங்குள்ள நெய்க்காரன்பட்டி உணவகத்தில் இருவரும் சேர்ந்து உணவருத்தியுள்ளனர்.

சாப்பிட்டு முடித்துவிட்டு உணவகத்தில் இருந்து வெளியே வந்த நேரத்தில், எதிர்திசையில் கார்த்தியின் கூடலில் மற்றொரு காரில் வந்து சத்தியமூர்த்தியை கடத்தி சென்றுள்ளனர். சத்தியமூர்த்தியை காரில் கடத்தி அங்குள்ள குகை பகுதியில் இருக்கும் கார் செட்டில் அடைத்து வைத்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். 

சத்தியமூர்த்தி 3 நாட்களாக பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்து வந்ததை அடுத்து, 3 நாட்களும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், ரூ.12 இலட்சத்தை பறித்துக்கொண்டு, கடந்த 14 ஆம் தேதி சத்தியமூர்த்தியை விடுத்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளித்தால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். 

பின்னர் ஒருவழியாக ஓசூருக்கு வந்த சத்தியமூர்த்தி குடும்பத்தினரிடம் விஷயத்தை தெரிவிக்கவே, காவல் நிலையத்தில் புகாரளிக்கக்கூறி குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளார். குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் கோபால், கௌரி சங்கர், சுஜித் மற்றும் ஜீவாவை கைது செய்தனர். 

இதற்கு பின்னர் முக்கிய குற்றவாளியான கார்த்திக், கூட்டாளி பாபு மற்றும் முருகப்பாண்டியன், பிரகாஷ் ஆகியோரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், கார்த்தியின் மீது இணைய மோசடி, செக் மோசடி மற்றும் நில மோசடி போன்ற வழக்குப்பதிவுகள் இருந்துள்ளது. ஓசூரில் இருந்த கார்த்திக் சத்தியமூர்த்தியின் பொருளாதாரம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான தகவலை அறிந்து கடத்தலை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in Krishnagiri businessman kidnapped case


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->