சேர்ந்து வாழ தான் முடியாது.. இதுவாச்சும் ஒண்ணா இருக்கட்டும்.. கள்ளக்காதல் ஜோடியின் விபரீத முடிவு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொருகுமலை பகுதியை சார்ந்தவர் பினோ (வயது 31). இதே பகுதியை சார்ந்தவர் உஷா (வயது 29). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், உஷாவிற்கு அவரது உறவினருடன் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். 

இந்நிலையில், உஷாவுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தங்களின் காதலை கைவிட இயலாது பேசி வந்துள்ளனர். இருவரும் பிரிய மனமில்லாது இருந்து நிலையில், அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

இவர்கள் இருவரும் இதனை நாட்கள் தனிமையில் சந்தித்து வந்த நிலையில், இருவரும் விஷம் பிரிய மனமில்லாது தற்கொலை முடிவு எடுத்துள்ளனர். இவர்களின் திட்டப்படி நேற்று இருவரும் அங்குள்ள உவரிக்கு புறப்பட்டு வந்துள்ளனர். 

பின்னர் விஷமருந்தி கடலில் விழுந்த நிலையில், அங்குள்ள அந்தோனியார் கோவிலின் முன்பாக ஒதுங்கியுள்ளனர். மயக்க நிலையில் இருந்த இருவரையும் மீட்ட காவல் துறையினர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kanniyakumari illegal affair couple suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->