கூழுக்கும் ஆசை., மீசைக்கும் ஆசை.! ஊதாரியாக திரிந்து வெட்டி காதல்.. குமரியில் அரங்கேறிய கொடூர சோகம்.!!
in kanniyakumari girl missing with bangles with ex lover
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தங்காட்டில் வசித்து வருபவர் வேல்முருகன். இவர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இங்குள்ள பரசேரி பகுதியை சார்ந்தவர் ராஜஸ்ரீ.
இவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதத்தின் 24 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., கடந்த 16 ஆம் தேதியன்று வழக்கம்போல பணிக்கு சென்றுவிட்டு திரும்பிய வேல்முருகன் மனைவியை காணாது தேடியலைந்துள்ளார்.
மேலும்., வேல்முருகன் கட்டிய தாலி மட்டும் வீட்டில் கழட்டி வைக்கப்பட்டு இருந்த நிலையில்., உறவினர்களின் அன்பளிப்பு 100 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம்., 2 அலைபேசிகள் மாயமாகியுள்ளது. மேலும்., ராஜஸ்ரீயும் மாயமாகியுள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேரோகொண்ட விசாரணையில்., ராஜஸ்ரீயுடைய பள்ளிப்பருவ காதல் விவகாரம் தெரியவந்துள்ளது.
ராஜஸ்ரீயின் பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த சந்தோஷ் என்பவரை காதலித்து வந்த நிலையில்., சந்தோஷ் பணிகளுக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்ததால் கடன் தொல்லை அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ராஜஸ்ரீயின் தந்தையிடம் பெண் கேட்டால் கட்டாயம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கமாட்டார் என்று நினைத்து சந்தோஷ்., கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதை போல., பெண்ணிற்கும் - பணத்திற்கும் ஆசைப்பட்டு திருமணம் முடிந்த பெண்ணை கடத்தி சென்றிருக்கலாம் அல்லது பெண்ணின் சம்மதத்துடன் சென்று இருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த பிரச்சனை இருவீட்டாருக்கும் பெரும் அவமானமான நிலையில்., தனது மகனின் நிலையை எண்ணிய தந்தை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து பெரும் சோகமாக அனைத்தும் ஏற்படவே., இது குறித்து விசாரணை மேற்கொண்டு., சந்தோஷ் மற்றும் ராஜஸ்ரீயை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in kanniyakumari girl missing with bangles with ex lover