21 வயது இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. காஞ்சிபுரம் படப்பையில் பேரதிர்ச்சி.!! கொந்தளிக்கும் மக்கள்.!!
in kanchipuram 21 year girl gang rapped murder police investigation
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சார்ந்த பெண்மணி (வயது 21), தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை ஆதனஞ்சேரி பெரியார் தெருவில் வசித்து வந்துள்ளார். இங்கு வீடெடுத்துள்ள தோழியுடன் இவரும் தங்கியிருந்து வந்துள்ளார்.
அங்குள்ள ஒரகடம் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு பணி என்ற காரணத்தால், இவரது தோழி காலை பணிக்கு சென்றுள்ள நிலையில், மாலை நேரத்தில் சுமார் 4 மணியின் போது வீட்டிற்கு வந்த நேரத்தில், வீட்டின் வாயில் திறந்துள்ளது.
வீட்டிற்கு உள்ளே சென்ற நேரத்தில் தோழி மயக்கமான நிலையில் சலனம் ஏதும் இல்லாது இருந்துள்ளார். பின்னர் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவசர ஊர்தியில் வந்த மருத்துவ குழுவினர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மணிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இளம்பெண்ணின் உடலை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பெண்ணின் உடலில் கன்னம் மற்றும் மார்பு பகுதியில் நகத்தினால் கீறப்பட்டதும் போன்றும், கழுத்து பகுதி சிவந்த நிறத்துடனும், நகக்கீறலும் இருந்துள்ளது. காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசனரையில், பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பெண்ணின் தோழியிடம் மேற்கொண்ட விசாரணையில், தோழி வீட்டிற்கு வந்த நேரத்தில் ஆடைகள் கிழிந்து அலங்கோலமாக இருந்ததாகவும், இவரின் உடலை மீது போர்வை இருந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நேரத்தில், சந்தேகத்திற்கு இடமான வகையில் மூன்று நபர்கள் உலாவியதாகவும், இதனால் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்குள்ள கண்காணிப்பு காமிராக்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
பெண்ணின் காதலன் என்று அழைக்கப்படும் மனிஷும் தாம்பரத்தில் இருக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், இந்த பகுதியில் கஞ்சா போதை கும்பலின் நடமாட்டமும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை தற்போது காவல் துறையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in kanchipuram 21 year girl gang rapped murder police investigation