கூட வாழ அழைத்து வந்தேன்... குழந்தையை காண ஆவல் பட்டாள்..! கள்ளக்காதலியை கொலை செய்த கொடூரன் பகீர் வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகேயுள்ள கல்லந்தல் கிராமத்தை சார்ந்தவர் சுபாஷ் (வயது 52). இவருக்கு திருமணம் ஆகாத நிலையில்., பெங்களுருவில் உள்ள சாம்ராஜ்நகர் பேட்டையில் தங்கியிருந்து வர்ணம் பூசும் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில்., சாம்ராஜ்நகர் பேட்டை பகுதியை சார்ந்தவர் அருண். இவரது மனைவியின் பெயர் சுவேதா (வயது 35). இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்., சுபாஷ் பணியாற்றி வந்த ண்ணேத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். 

இவர்களின் சந்திப்பு பின்னாளில் காதலாக மாறவே., கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில்., கடந்த வாரத்தின் போது சுபாஷ் சுவேதாவுடன் கல்லந்தல் கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர். 

illegal affair,

திருமணம் செய்யாமல் இருந்த மகன் பெண்ணுடன் வந்ததை அறிந்த தாயார் அதிர்ச்சிக்குள்ளாகி விசாரிக்கவே., சுவேதாவிற்கு கணவர் - குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த விசயத்திற்கு சுபாஷின் தாயார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

கள்ளக்காதல் ஜோடிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாது இருந்து வந்த நிலையில்., இருவரும் மது அருந்தும் பழக்கத்திற்கும் உள்ளாகியுள்ளனர். இந்நிலையில்., நேற்று வழக்கம்போல இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். 

இந்த நேரத்தில் இவர்களுக்குள் தகராறு ஏற்படவே., வாக்குவாதம் அதிகரித்து ஆத்திரமடைந்த சுபாஷ் அங்கிருந்த இரும்பு கம்பி மற்றும் அம்மிக்கல் மூலமாக சுவேதாவை தாக்கியுள்ளான். இதனால் சுவேதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரத்த வெள்ளத்தில் துடித்தது பலியாகியுள்ளார்.  

fight,

இது தொடர்பான தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்ட பின்னர் சுவேதாவின் உடலினை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் சுபாஷை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில்., நானும் - சுவேதாவும் நெருங்கி பழகிய பின்னர் கணவன் - மனைவியாக வாழ சொந்த ஊருக்கு அழைத்து வந்தேன். அவளோ அவளின் குழந்தையை காண வேண்டும் என்று கூறியதால் எனக்கு ஆத்திரம் அதிகமானது. இதனால் கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kallakurichi painter killed her illegal affair girl due to mother feeling


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->