வாங்கிய கடனிற்காக, நண்பனின் மனைவியை படுக்கைக்கு அழைத்த சோகம்.. மனமுடைந்து வாலிபர் எடுத்த விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தம்பாடி கண்ணாடிப்புதூர் பகுதியில் இருக்கும் சிறுவலூர் சாலை பகுதியை சார்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 38). இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

இவரது மனைவியின் பெயர் அணு (வயது 28). இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில், இராமச்சந்திரன் தனது நண்பரான கவுந்தம்பாடி பகுதியை சார்ந்த கார்த்திக் என்பவரிடம் காரை அடமானம் வைத்துள்ளார். 

இதற்காக ரூ.25 ஆயிரமும் வாங்கிய நிலையில், பல மாதத்திற்கு பின்னர் தான் வாங்கிய கடனை கொடுத்துள்ளார். இந்த நேரத்தில், ராமச்சந்திரனின் மனைவியிடம் கார்த்திக் அவதூறாக பேசியுள்ளேன். இது குறித்து ராமச்சந்திரனிடம் அவரது மனைவி விஷயத்தை கூறியுள்ளார். 

இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த ராமச்சந்திரன், குருணை மருந்தை சாப்பிட்டு மயங்கி இருந்துள்ளார். இவரை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள கவுந்தம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். 

கவுந்தம்பாடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக்க ஈரோடு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழக்கவே, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode man suicide attempt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->