கல்லூரி மாணவியை நாடக காதலால் ஏமாற்றி., கொலை செய்து புதைத்த கொடூரன்..! உடந்தையாக இருந்த கொடூர தாய் மற்றும் உறவினர்கள்..!!
in dindukal college student killed by her husband and family
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகேயுள்ள கேத்தம்பட்டி பகுதியை சார்ந்தவர் பாண்டி என்கிற வீரமலை. இவர் உணவகத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகளின் பெயர் முத்தரசி (வயது 19). இவர் வேடசந்தூருக்கு அடுத்துள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இவரது மூத்த சகோதரியின் பெயர் தமிழரசி. தமிழரசிற்கு திருமணம் முடிந்து., திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
தனது அக்காவை பார்ப்பதற்கு அடிக்கடி திருப்பூர் சென்று வரும் வழக்கத்தை முத்தரசி வைத்திருந்த நிலையில்., இந்த சமயத்தில் ஆத்துகால்புத்தூர் பகுதியை சார்ந்த ஓட்டுநரான பரத் (வயது 29) என்பவனுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த சமயத்தில்., கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னதாக முத்தரசி திடீரென மாயமாகியுளளார்.
இவரை காணாது தேடி அலைந்த உறவினர்கள்., அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட சமயத்தில் பரத் முன்னுக்கு பின்னர் முரணாக பதிலளித்துள்ளான். இவனின் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் எழவே., காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதை அடுத்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமிக்கு திருமண ஆசை காட்டிய காம கொடூரன் பரத் அங்குள்ள பகுதியில் தனியாக வீடெடுத்து வசித்து வந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக., இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில்., பரத் - முத்தரசியை தனது வாகனத்தில் தனியாக அழைத்து சென்று கடுமையாக அடித்து உதைத்துள்ளான். இதனால் முத்தரசி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பரத் - சிறுமியின் உடலை வாகனத்தில் தனது வீட்டிற்கு எடுத்து வந்து., குடும்பத்தினரிடம் விஷயத்தை கூறியுள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் முத்தரசியின் உடலை வீட்டிலேயே புதைத்துள்ளனர். இதற்கு பின்னர் இந்த விஷயத்தை மறைத்து அதே பகுதியை சார்ந்த மற்றொரு பெண்ணிற்கு பரத்தை திருமணம் செய்து வைப்பதற்கு நிச்சயமும் செய்துள்ளனர்.
திருமணம் நடைபெறும் சமயத்தில் பெண்ணின் உடல் வீட்டில் இருப்பது நல்லதல்ல என்று கருதிய பரத்தின் பெற்றோர்., திருமணத்திற்கு முன்னர் முத்தரசியின் உடலை தோண்டியெடுத்து அங்குள்ள பொட்டல் காட்டிற்கு எடுத்துச்சென்று எரித்துள்ளனர். பின்னர் ஏதும் நடக்காதது போல நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இரண்டாவதாக நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணிற்கும் - பரத்திற்கும் கடந்த வைகாசி மாதத்தின் போது திருமணமும் நடைபெற்றுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பரத் மற்றும் பரத்தின் தாயார் லட்சுமி., உறவினர் குமார் (வயது 60) ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும்., இது தொடர்பான விஷயத்தை அறிந்து தலைமறைவாக இருந்த மூவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் சோகத்தையும்., அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in dindukal college student killed by her husband and family