மனைவியுடன் கள்ளக்காதல் செய்த இளைஞன்... காட்டோரமாக அழைத்து சென்று போட்டுத்தள்ளிய கணவன்.. திண்டுக்கல்லில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிபட்டி பகுதியை சார்ந்தவர் முருகன். இவரது மகனின் பெயர் சதீஷ்குமார் (வயது 30). இவர் தனியார் கல்லூரியில் லெப் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கல்லூரியில் இருந்து பணிநீக்கம் செய்து அறிவிக்கப்பட்டார். இவருக்கு திருமணம் முடிந்து 1 வயதுடைய குழந்தை உள்ளது. 

இந்த நேரத்தில், நேற்று இரவின் போது அங்குள்ள பள்ளபட்டிக்குளம் அருகேயுள்ள பகுதியை சதீஷின் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்துள்ளார். இவரின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மது போதையில் சதீஷுடன் வந்து வாலிபர்கள் மூலமாக சதீஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பான சந்தேகத்தின் பேரில், பெரியபள்ளப்பட்டி பகுதியை சார்ந்த பிரவீன்குமார் (வயது 24) மற்றும் பார்த்தீபன் (வயது 25) ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

murder,

இந்த விசாரணையில், பிரவீன்குமாரின் மனைவியான செல்லாயி கரகாட்டம் ஆடி வந்தவர். செல்லாயியுடன் பழகி வந்த சதீஷ் நாளடைவில் கள்ளக்காதலாக மாற்றி பழகி வந்துள்ளார். இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பிரவீன்குமார் தனது மனைவியை கண்டித்த நிலையில், கடந்த ஒரு வருடமாக தனது மனைவியை பிரிந்தும் வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக செல்லாயியின் அலைபேசியை வாங்கி பார்க்கையில், சதீஷும் - செல்லாயியும் தினமும் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனது நண்பரின் உதவியுடன் சதீஷை கொலை செய்ய பிரவீன் திட்டமிட்டுள்ளார். இவரின் திட்டப்படி சதீஷை மது அருந்த அழைத்து சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Dindigul youngster murder due to illegal affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->