நாடக காதல் மயக்கம்.. காதலனுடன் சேர்த்து மர்டர்.. போலீசுக்கு போன் கால்.. கொடைக்கானலில் பகீர்.!!
in dindigul love girl and friend murder woman police investigation going on
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைக்காடு பகுதியை சார்ந்தவர் கேசவன். இவரது மனைவியின் பெயர் சுந்தரி (வயது 31). இவர்கள் இருவருக்கும் 11 வயதுடைய மகள் உள்ள நிலையில்., கணவன் - மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாட்டால் கடந்த 3 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவரின் மகளை கேசவன் வளர்த்து வருகிறார்.
இந்தா நிலையில்., இதே பகுதியை சார்ந்த முருகன் என்பவரின் இல்லத்தில் சுந்தரி பணியாற்றி வந்த நிலையில்., இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். மேலும்., முருகன் சென்னையில் பணியாற்றி வருவதால் சுந்தரி அவ்வப்போது இல்லத்திற்கு சென்று வந்துள்ளார்.
இந்த நேரத்தில் சுந்தரி கடந்த 22 ஆம் தேதியன்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து., இது குறித்து சுந்தரியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சமயத்தில்., சுந்தரியின் வீட்டருகே இருக்கும் உறவினரின் மகள் மாலா (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தங்கியிருந்துள்ளார். இவர் பதினோராம் வகுப்பு பயின்று வரும் நிலையில்., சுந்தரியின் இறப்பு குறித்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்ட சமயத்தில் முன்னுக்கு பின்னான தகவல்களை அளித்துள்ளார்.
இதனையடுத்து மேற்கொண்ட தீவிர விசாரணையில் காவல் துறையினரிடம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து., ராஜா (வயது 16) என்ற வாலிபரும் - நானும் ஒன்றாக திண்டுக்கல்லில் உள்ள பள்ளியில் பயின்று வந்தோம். எங்களுக்குள் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.
நாங்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வருவதற்கு சுந்தரியின் இல்லத்தை பயன்படுத்தினாம். இந்த நிலையில்., மூன்று மாடிகள் மொண்ட இல்லத்தில் நாங்கள் இரண்டாவது தளத்தில் தனிமையில் இருந்ததை சுந்தரி பார்த்துவிட்டு எங்களை கண்டித்தார்.
இந்த விஷயம் தொடர்பாக பெற்றோரிடம் தெரிவிக்கப்போவதாக அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த நாங்கள் இனி இவ்வாறு நடக்காது என்று மன்னிப்பு கோரினோம். பின்னர் இருவரும் சென்றுவிட்டோம். இருப்பினும் எங்களுக்கு பயமாக இருந்தது. இதனால் சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று அவரை கொலை செய்தோம்.
பின்னர் ராஜா திண்டுக்கல் சென்ற நிலையில்., சுந்தரியின் பிணத்துடன் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் காவல் துறையினருக்கு இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தேன். தற்போது விசாரணையில் மாட்டிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் மாலாவை கைது செய்த காவல் துறையினர் மதுரையில் இருக்கும் சீர்திருத்த பள்ளியில் சேர்த்த நிலையில்., தலைமறைவாக இருக்கும் ராஜாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருவரது எதிர்காலம் இங்கு பெரும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in dindigul love girl and friend murder woman police investigation going on