மருத்துவரின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண் - குழந்தை..!! தருமபுரியில் சோகம்..!! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள செங்கொடி பகுதியை சார்ந்தவர் காந்தி. இவர் கட்டிட மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் - அதே பகுதியை சார்ந்த ஜோதி (வயது 23) என்ற பெண்ணிற்கும்., கடந்த 11 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்யப்பட்டு இருந்த நிலையில்., ஜோதி தற்போது நிறைமாத கர்ப்பிணி ஆவார். 

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜோதிக்கு., இன்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து பிரசவத்திற்க்காக அங்குள்ள தருமபுரி அரசு மருத்துவமனையில் ஜோதியை அனுமதித்தனர். ஜோதிக்கு நேற்று இரவு மருத்துவர்கள் பிரசவம் பார்த்த நிலையில்., ஜோதிக்கு பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. 

pregnant lady, pregnant, pregnancy, கர்ப்பிணி பெண், கர்ப்பிணி,

இந்த சமயத்தில்., சிறிது நேரத்தில் ஜோதியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் ஜோதி மற்றும் இறந்த குழந்தையின் உடலை கண்டு கதறியழுதனர். மேலும்., இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் மருத்துவர்கள் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும்., அலட்சியத்தால் எனது குழந்தை மற்றும் மனைவி இருந்துவிட்டார்கள் என்றும் புகார் அளித்தனர். 

தருமபுரி கர்ப்பிணி பெண் - குழந்தை இறப்பு, தருமபுரி,

இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள துவங்கினர். ஜோதி இறந்த தகவலை அறிந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு முன்னர் குவிந்தத்தை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. மேலும்., காலையில் பிரசவம் பார்க்க வேண்டிய மருத்துவர்கள்., மாலை வரை சிகிச்சை அளிக்காமல் இருந்ததால்., அலட்சியத்தின் காரணமாக இறந்துவிட்டனர் என்று மருத்துவமனையை முற்றுகையிட்டனர். 

காலையிலும் மருத்துவமனையை முற்றுகையிட்டதை அடுத்து., மருத்துவருக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டது. இதனை அறிந்த காவல் துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி., துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த தகவலானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in darmapuri pregnant lady died due to doctor irresponsible work


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->