செல்லமாக நண்பனை அழைத்து சென்று மது ஊற்றி கழுத்தறுத்து கொலை.. உடலை மண்ணில் புதைத்த கொடூரம்.. கடலூரில் பரபரப்பு சம்பவம்.!!
in cudallore youngster murder by friends police investigation in process
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சிவனந்தபுரம் பகுதியை சார்ந்தவர் தினேஷ் பெஞ்சமின். இவரது மனைவியின் பெயர் பிரதீபா. இவர்களின் மகன் பெயர் ஜெய்வின் ஜோசப் (வயது 18). இவர் கடலூரில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இந்த நிலையில், கடந்த நான்காம் தேதியன்று வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற ஜெய்வின் ஜோசப் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் மகனை தேடி அலைந்துள்ளனர்.
இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், ஜோசப்பின் அலைபேசி எண்ணை ஆய்வு செய்துள்ளனர்.
இந்த சோதனையில், இப்பகுதியை சார்ந்த இரண்டு இளைஞரின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு பேரையும் காவல் துறையினர் சந்தேகித்து மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் சம்பவத்தன்று ஜோசப்பை அங்குள்ள காரைக்காடு பகுதிக்கு அழைத்து சென்று மது அருந்த வைத்துள்ளனர். பின்னர் போதை அதிகமானதும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை குழிதோண்டி புதைத்துள்ளனர்.
இதனை அறிந்த பெற்றோர்கள் கதறியளவே, மாணவன் தோண்டி புதைக்கப்பட்ட இடத்தினை காவல் துறையினர் கண்டறிந்து உடலை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தெரியவந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மாணவர் எதற்க்காக கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in cudallore youngster murder by friends police investigation in process