மனைவி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கணவன்... விசாரணையில் பரிதாப தகவல்.. டிக் டாக் அரக்கனால் அரங்கேறிய கொடூரம்.!!
in cudallore wife murder case police arrest husband
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே இருக்கும் காடாம்புலியூரை சார்ந்தவர் குமரவேலு (வயது 25). இவர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ராஜேஸ்வரி (வயது 22). இவர்கள் இருவருக்கும் ஒரு வயதுடைய மகனும், ஒரு வயதுடைய மகளும் இருக்கின்றனர். இவர்கள் பண்ருட்டி அருகேயுள்ள அன்வர்ஷா நாலாவது தெருவில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் வழக்கம் போல இந்த தகராறு ஏற்படவே, இதனால் ஆத்திரமடைந்த குமரவேல் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து இரவில் குழந்தைகள் தூங்கியதும், இரும்புக் கம்பியால் ராஜேஸ்வரியின் தலையில் அடித்து அவரை ரத்த வெள்ளத்தில் உயிருக்கு துடிதுடிக்க போராட விட்டுள்ளார்.
ஆத்திரம் தீராத குமரவேல் வீட்டிலிருந்த ஆட்டுரலை எடுத்து ராஜேஸ்வரியின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் இரவோடு இரவாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து குமரவேல் தலைமறைவாகவே, காலை வீட்டில் இருந்து ரத்தம் வெளியே வழிந்து இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து பண்ருட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பான தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். இதில், தலைசிதைந்த படி ராஜேஸ்வரி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இது தொடர்பாக தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில், மெக்கானிக் தொழில் செய்து வந்த குமரவேல் சொந்தமாக கார் வைத்துள்ளார். இவர் அடிக்கடி இரவு நேரங்களில் வாடகைக்கு சவாரிக்கு சென்ற வேளையில், ராஜேஸ்வரிக்கு பல வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. இந்த விஷயத்தை அறிந்த குமாரவேல், ராஜேஸ்வரியை கண்டித்துள்ளார். இதனை ராஜேஸ்வரி ஏற்க மறுத்துள்ளார். மேலும், காதலர் தினத்தன்று ராஜேஸ்வரி வெளியே சென்று வந்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த குமாரவேலு மனைவியை மீண்டும் எச்சரிக்கவே, இதனால் வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மனைவியை கொலை செய்ய முடிவு செய்து, கொடூர கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குமரவேலுவை பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்..
தற்போது குமரவேலை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பான விசாரணையில், ராஜேஸ்வரி டிக் டாக் செயலிக்கு அடிமையானதால் கணவர் மற்றும் குழந்தைகளை கவனிக்காது, அதிக நேரம் டிக் டாக்கில் மூழ்கி இருந்துள்ளார். மேலும், குமரவேல் வழிப்பறி வழக்குகளில் சிக்கிய நிலையில், இவரை வெளியே எடுக்க ராஜேஸ்வரியின் தாயார் தனக்கு தெரிந்த நபரின் மூலம் குமரவேலை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார். இவருடன் - ராஜேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காதலர் தினம் மற்றும் காதலர் தினத்தின் மறுநாள் போது மற்றொரு நபருடன் காரில் வெளியே சென்று வந்துள்ளார். இதற்கு பின்னர் கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. பின்னர் தனது குழந்தையை குமரவேலின் தாயாரது இல்லத்தில் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. டிக் டாக் செயலியால் இன்னும் எத்தனை குடும்பங்கள் நிம்மதியை இழந்து தவிர்க்கபோகிறது என்று எண்ணினாலே மனதில் பயம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in cudallore wife murder case police arrest husband