மனைவியை ஆசைகாட்டி அபகரித்த கள்ளக்காதலனை போட்டுத்தள்ளிய கணவன்.! அண்ணனுக்கு உதவியாக தம்பி.!! கடலூரில் பரபரப்பு.!!
in cudallore man killed due to illegal affair with wife police investigation going on
கடலூர் மாவட்டத்தில் உள்ள குள்ளன்சாவடி அருகேயுள்ள கருமாசிபாளையத்தை சார்ந்தவர் ராஜமுருகன். இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ரேவதி. இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில்., இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில்., ரேவதி அங்குள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வந்த நிலையில்., இவர்களின் இல்லறமானது நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில்., ரேவதியும் - அவருடன் பணியாற்றும் சக ஆசிரியரும் தினமும் பேருந்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். அந்த சமயத்தில்., அதே பகுதியை சார்ந்த கோவிந்தராஜ் என்ற பேருந்து நடத்துனருக்கும் - இராஜமுருகனுக்கும் இடையே இருந்த நட்பின் அடிப்படையில்., இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
இந்த சமயத்தில்., இவர்கள் இருவரின் நட்பானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இவர்களின் உறவை அறிந்த இராஜமுருகன் இருவரையும் கண்டித்த நிலையில்., இருவருக்குள்ளும் பிரச்சனை அதிகமாகி பிரிய முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில்., கடந்த இரண்டாம் தேதி முதல் ரேவதியும் - கோவிந்தராஜும் மாயகியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
இருவரையும் தேடி அலைந்த உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்திருந்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில்., சனிக்கிழமை அங்குள்ள மனக்குப்பம் பகுதியில் அடையாளரும் தெரியாத நிலையில் பிணம் ஒன்று கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகையில்., ராஜமுருகன் - அவரது சகோதரர் ராஜசிம்மன் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்களின் வாக்குமூலத்தில் எனது மனைவி ரேவதி - கள்ளக்காதலன் கோவிந்தராஜ் சேர்ந்து வாழ முடிவு செய்தனர்.
இவர்களின் திட்டப்படி ரேவதியை கோவிந்தராஜ் சென்னைக்கு அழைத்து சென்ற நிலையில்., ஆத்திரமடைந்த நான் மற்றும் எனது சகோதரரும் இருவரையும் தேடி ஊருக்கு அழைத்து வந்து., ரேவதியை அவரது இல்லத்திற்கு அனுப்பி வைத்து., கோவிந்தராஜை வெட்டி கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in cudallore man killed due to illegal affair with wife police investigation going on