பெண்ணை தூக்கி சென்று கூட்டுப்பலியால் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரம்..! நெய்வேலியில் பரபரப்பு.!!
in cudallore girl sexual harassment by gang police arrest culprit
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி அருகேயுள்ள ஊ.மங்களம் புதுதெற்குவெள்ளூர் பகுதியை சார்ந்தவர் மாயாவதி (வயது 31). இவர் விதவை பெண்ணாக இருந்து வரும் நிலையில்., வேப்பங்குறிச்சியை சார்ந்த சுரேந்தர் என்ற இளைஞருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இந்த சமயத்தில்., இவர்கள் இருவரும் நெய்வேலி புதிய அனல் மின் நிலையம் பகுதிக்கு அருகே சென்ற சமயத்தில்., கொளிருப்பு காலனி பகுதியை சார்ந்த கார்த்திக்., சதீஷ்குமார்., ராஜதுரை மற்றும் பிரகாஷ்., சிவபாலன் ஆகியோர் சேர்ந்து வாகனத்தை இடைமறித்துள்ளனர்.
கைகளில் கத்தியை வைத்து கொண்டு இடைமறித்த கொடூரன்கள் சுரேந்தரை அடித்து துரத்திவிட்டு., மாயாவதியை அங்குள்ள தோட்டத்திற்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நேரத்தில் கொடூரத்தை அரங்கேற்றிய காம கொடூரன்கள்., மயவாதியை யார் சாலையில் கொண்டு விடுவது என்று பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இத்னால் வந்த தகராறில் நால்வரும் சேர்ந்து பிரகாஷ் என்ற கொடூரனை கல்லால் அடித்த நிலையில்., அவன் சம்பவ இடத்திலேயே செத்துள்ளான்.
காவல் துறையினரின் விசாரணையில் மது போதையில் கொலை செய்ததாக தெரிவித்த நிலையில்., பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததை கூறாமல் தப்பிக்க முயற்சித்துள்ளான்கள்.
இவர்களின் பிடியில் இருந்து தப்பித்து வந்த பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்து விசாரணை மேற்கொள்கையில் விபரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொடூரன்களின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in cudallore girl sexual harassment by gang police arrest culprit